Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் ரூ 2 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்த ராவ் தலைமை தாங்கினார் கோட்டாட்சியர் வீராசாமி தாசில்தார் பாலசுப்பிரமணியன் முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் நிலவள வங்கி தலைவர் சோழபுரம் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய பொலிவுடன் உள்ள ரூ 2 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் உள்ள கும்பகோண வட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கணேசன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.